Sunday 19th of May 2024 10:29:13 AM GMT

LANGUAGE - TAMIL
-
12 முதல் 15 வயதான சிறுவர்களுக்கு  தடுப்பூசி போட இங்கிலாந்து அனுமதி!

12 முதல் 15 வயதான சிறுவர்களுக்கு தடுப்பூசி போட இங்கிலாந்து அனுமதி!


இங்கிலாந்தில் 12 வயது முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இதற்கான கால எல்லை விரைவில் அறிவிக்கப்படும் என இங்கிலாந்து சுகாதார துறை அறிவித்துள்ளது.

உலகில் பெரும்பாலான நாடுகள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றன. சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

அமெரிக்காவில் 12 முதல் 15 வரையான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியமும் 12 முதல் 15 வயதுடையோர் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதித்துள்ளது.

அதேபோல், சீனாவும் 3 முதல் 17 வயது வரையான சிறுவர்களுக்கு சினோவாக் தடுப்பூசியைப் போட அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE